Developed by - Tamilosai
நாட்டில் எரிபொருள் விநியோகம் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை சீரமைக்கப்படாது என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24ம் திகதி நடைமுறைக்கு வர வேண்டும். இறுதியாக எரிபொருள் விலை அதிகரிப்பு மே 24ம் திகதி மேற்கொள்ளப்பட்டது எனவும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி,
92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை74 ரூபாவாலும்,
95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 78 ரூபாவாலும்,
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 56 ரூபாவாலும்,
சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 65 ரூபாவாலும்,
மண்ணெண்ணெய் லீற்றருக்கு 210 ரூபா ரூபாவாகவும், அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.