Developed by - Tamilosai
மூன்று தசாப்தங்களின் பின்னர் எயார் பிரான்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
இதன்படி 100 பயணிகளுடன் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன.
அதன்பின்னர், பிரான்ஸில் இருந்து சுமார் 6 வருடங்களுக்கு பின்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான முதல் விமானம் கடந்த முதலாம் திகதி இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.