Developed by - Tamilosai
எங்கள் நாட்டில் நடப்பது துயரம்,உக்ரேனியர்கள் தங்கள் நிலத்திற்காகவும், தங்களின் சுதந்திரத்திற்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள் -உக்ரேன் அதிபர்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பங்கேற்ற உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி சற்றுமுன் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், எங்கள் நாட்டில் நடப்பது துயரம். உக்ரேனியர்கள் தங்கள் நிலத்திற்காகவும், தங்களின் சுதந்திரத்திற்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள் என்று கூறினார்.
“யாரும் எங்களை பிரிக்க முடியாது. மன உறுதியை குலைக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் யுக்ரேனியர்கள்,” என்றார் ஸெலென்ஸ்கி.
மேலும் அவர், உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், நேற்று வரை 16 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.
“நீங்கள் எங்களுடன் துணை இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கவும்”, உக்ரேனை அவர்களால் வீழ்த்த முடியாது என்பதையும், நாங்கள் “உண்மையான ஐரோப்பியர்கள்” என்பதையும் நிரூபியுங்கள் என்று அவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பங்கேற்ற உ க்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி சற்றுமுன் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், எங்கள் நாட்டில் நடப்பது துயரம். உக்ரேனியர்கள் தங்கள் நிலத்திற்காகவும், தங்களின் சுதந்திரத்திற்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள் என்று கூறினார்.
“யாரும் எங்களை பிரிக்க முடியாது. மன உறுதியை குலைக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் யுக்ரேனியர்கள்,” என்றார் ஸெலென்ஸ்கி.
மேலும் அவர், உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், நேற்று வரை 16 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.
“நீங்கள் எங்களுடன் துணை இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கவும்”, உக்ரேனை அவர்களால் வீழ்த்த முடியாது என்பதையும், நாங்கள் “உண்மையான ஐரோப்பியர்கள்” என்பதையும் நிரூபியுங்கள் என்று அவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்.