தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் பயிற்சி பெற்ற யாரும் பங்குபற்றவில்லை – ரணில்

0 271

ஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் பங்குபற்றவில்லை என முன்னாள் பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் இங்கு ஒன்றைக் கூற வேண்டும். சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதப் பயிற்சிப் பெற்ற எந்தவொரு நபராலும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விடயத்தை யாரும் அரசியல் மயப்படுத்தக்கூடாது. விசாரணை அறிக்கைகளை ஏன் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதுவே எமது கேள்வியாகும்.

சாதாரணமாக எந்தவொரு ஆணைக்குழுவில் விசாரணைகள் நடக்கும்போதும் சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டுதான் வருகிறோம்.

இவற்றை சபையிலிருந்து மறைக்க முடியாது. அவ்வாறு விசாரணைகளை மறைப்பது எமது வரப்பிரசாதங்களை மீறும் செயற்படாகும்.

குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற உடனேயே, பொலிஸாரும் சி.ஐ.டியினரும் இணைந்துதான் பொரளை உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த சூத்திரதாரிகளைக் கைது செய்தனர். மாறாக புலனாய்வுப் பிரிவினர் அல்ல என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.