Developed by - Tamilosai
ரி- 20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறும் போட்டியில் நாணயச் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய போட்டி அபுதாபி விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில், லஹிரு குமாரவிற்குப் பதிலாக பினுர பெர்னாண்டோ விளையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.