தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

0 79

உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக் குழுவிடம் விசாரிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எந்த அடிப்படையில் நேற்று அணித் தேர்வு நடத்தப்பட்டது என்று இதன் போது விசாரிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்றைய போட்டியில் தனஞ்சய டி சில்வா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக துஷான் ஹேமந்த அழைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என அவர் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் குறித்தும், இந்தப் போட்டியில் இலங்கை அணி வெளிப்படுத்திய மோசமான ஆட்டத்திறன் குறித்தும் விசாரிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.