Developed by - Tamilosai
இருபதுக்கு 20 உலக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கட் வீரர் மஹெல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா இதனைத் தெரிவித்தார்.
ஐசிசி உலக்கிண்ண இருபதுக்கு 20 தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.