Developed by - Tamilosai
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் மூலம் இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் டெல்டா பிளஸ் திரிபடையுமாயின் பொதுமக்களின் செயற்பாடு அதற்குக் காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் டெல்டா பிளஸ் திரிபு குறித்து நாட்டில் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் ஊடாக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.