தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கையில் கொரோனா மரணங்கள் 14 ஆயிரத்தை தாண்டியது

0 118

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, இலங்கையில்  கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 16 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 382 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 24 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 51 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.