Developed by - Tamilosai
பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற நிலையில் எதிர்காலத்தில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக பிரபல ஜோதிடர் கல்யாணி ஹேரத் மெனிகே தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் புதிய தலைவரொருவர் உதயமாகவுள்ளதாகவும் நாட்டில் பல பாரிய எழுச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் ராசி கும்பம் ஆகும். சனி இப்போது கும்ப இராசியில் இருக்கின்றார். நாட்டை ஆளும் தலைவனுக்கு இது கொடியது” என்று ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.