தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இரு தரப்பு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் பலி

0 62

முல்லைத்தீவு – மல்லாவி திருநகர் பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

சம்பவத்தின் போது காயமடைந்த 3 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் ஆவார்.

மேலும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யபட்டுள்ளதுடன் மல்லாவி பொலீசார் மேலும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.