தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இராணுவம் சுற்றிவளைக்க யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

0 743

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களினால் மரபுரீதியாக 6.05 மணிக்கு ஏற்ப்படுகின்ற ஈகைச்சுடர் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தூபியில் ஏற்றப்பட்டதோடு உயிரிழந்த வீர மறவர்களுக்கு  முழந்தாலிட்டு மாணவர்களால் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக சூழலில் இராணுவமும் போலீசும் குவிக்கப்பட்டு வழமையை விட கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகமாக இருக்கின்ற நிலையில் மாணவர்கள் தமது ஆத்மார்த்தமான கடமையை நிறைவேற்றியுள்ளனர். இன்று காலை பல்கலைக்கழக வேலை நாளாக இருந்தாலும் பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக கதவுகளை பூட்டிய வண்ணம் இயங்கியமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.