Developed by - Tamilosai
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, கண்டி, நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40km வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.