Developed by - Tamilosai
நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் இன்று இதுவரையில் 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,53,722 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,057 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,25,188 ஆக அதிகரித்துள்ளது.