Developed by - Tamilosai
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கந்தசஷ்டி விரத புண்ணிய காலத்தில், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில், மாலை மூன்று தொடக்கம் நான்கு மணிவரை முருக பக்திப் பாடல்கள் இசை அர்ச்சனை நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
மூன்றாம் நாள் நிகழ்விலே இணுவையூர் ஞான ஏந்தல் மா.ந.பரமேஸ்வரன் குழுவினர் வழங்கிய ‘திருப்புகழ் கச்சேரி’ நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.
அணிசேர் கலைஞர்களாக வயலின் – சு.பிரஜீவன்ராம் அவர்களும் மிருதங்கம் – அ.சண்முகப்பிரியன் அவர்களும் கஞ்சிரா – ப.கௌரீசன் அவர்களும் பங்குபற்றியிருந்தனர்.