Developed by - Tamilosai
அலவ்வ, பன்கொல்ல பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு மாடி வீடு ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்து அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீடு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வெடிப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் போயவலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.