தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரிசியின் விலை உயர்வடையும் அபாயம்!

0 43

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நடுத்தர மக்கள் தற்போது கிராமங்களில் இருந்து பத்து முதல் பதினைந்து மூட்டை நெல் எடுக்கின்றனர். சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய நெல் போதுமானதாக இல்லை. குறுகிய காலத்தில் அரிசியின் விலை சுமார் 500 ரூபாய் வரை உயரும் என அவர் கறிப்பிட்டுள்ளார்.

அரிசியின் மொத்த செலவு உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ அரிசியின் உற்பத்திச் செலவு 250 ரூபாவாக உள்ளது.

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.ரஞ்சித் அரசாங்கத்திடம் ஒரு கிலோ அரிசியின் விலையை மேலும் 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.