Developed by - Tamilosai
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக் கூடிய அரிசி தட்டுப்பாடு மற்றும் உணவு பஞ்சத்தை தவிர்க்கும் நோக்கில் ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசி வழங்குமாறு வங்காளதேசத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வர்த்தக வாணிப அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் வங்காளதேசத்தின் இலங்கைக்கான தூதுவர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம் ஆகியோருக்கு இடையில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இலங்கைக்கான வங்காளதேசத் தூதுவர் ஆரிபுல் இஸ்லாம், இலங்கையர்களுக்கு வங்காளதேசத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் போது வர்த்தக, வாணிப அமைச்சின் செயலாளர் எஸ்.டி. கொடிகாரவும் கலந்து கொண்டுள்ளார்.