தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும்

0 446

தற்போதைய அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, அடுத்த வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உதய கம்மன்பில தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.