Developed by - Tamilosai
யுக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல ராஜீய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க அரசு, வரவிருக்கும் ஆக்கிரமிப்பு பற்றியும் சர்வதேச ஒழுங்கு ஆபத்தில் உள்ளது பற்றியும் எச்சரிக்கைகளை விடுத்து வந்தது உண்மையாகியுள்ளது.
ரஷ்யர்கள் போருக்குத் தயாராக இருந்தாலும், அமெரிக்கர்கள் சண்டையிடத் தயாராக இல்லை என்பதையும் பைடன் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அமெரிக்க குடிமக்களை மீட்க யுக்ரேனுக்குள் படைகளை அனுப்புவதற்கும் அவர் மறுத்துவிட்டார். மேலும், அந்நாட்டில் ராணுவ ஆலோசகர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் பணியாற்றிவந்த படையினரையும்கூட திரும்ப அழைத்துக்கொண்டார்.